நாட்டு மரக் கறியும்
நல்ல கைக் குத்தரிசியும்
மான் இறைச்சியும்
மணலை மீனும்
நாட்டுக் கோழியும்
நல்ல மட்ட றாலும்
இட்டமுடன் தின்ற காலம்
சோளம்-இறுங்கு-குரக்கன்
சோக்கான தினை
தானியமாய் எங்களுக்கு
தந்த காலம்......
மீண்டும் வருமோ!
காடு சென்று
வேட்டையாடி
'காஞ்செறச்சி'
கொண்டு வரவும்......
பாலைப் பழம்
வீரப் பழம்
தாமரைக் காய் -
பறித்து வரவும்......
சோக்கான தினை
தானியமாய் எங்களுக்கு
தந்த காலம்......
மீண்டும் வருமோ!
காடு சென்று
வேட்டையாடி
'காஞ்செறச்சி'
கொண்டு வரவும்......
பாலைப் பழம்
வீரப் பழம்
தாமரைக் காய் -
பறித்து வரவும்......
சுதந்திரமாய் இருந்த காலம்
மீண்டும் பிறந்து வருமோ!
அறுகம்குடா வாவியிலே - அன்று
மீண்டும் பிறந்து வருமோ!
அறுகம்குடா வாவியிலே - அன்று
துள்ளி விளையாடிய
'கயல் மீன்கள்' எங்கே?
நமதூர்ப்பெண்களின்
'கண்களாய்' மாறிவிட்டனவோ!
'மண்வெட்டிச் சுறா'
பாலைமீன்-காலைமீன்
மன்னா-மணலை உண்டகாலம்
மாறிவிட்டதே.....
மறுபடியும் வருமோ
அந்தக் காலம்!
'மஃரிபு' நேரம் பார்த்து -
மறைவாய் நின்று......
தந்திக் கம்பிக்கு -
பதுங்கிப் பதுங்கி......
'சீமெந்துத் தாள்பேக்'கில்
'ஜப்பான் மீன்' வாங்கிச் -
சென்ற காலம்
மறைந்து போய்.......
'ஸொப்பிங் பேக்'கில்
ஜப்பான் மீன்
'கோல்டன்' ஆகி......
சொகுசாய் செல்கிறதே!
மணலையும் ஜப்பானும்......
சமமாய் அமர்ந்து -
சந்தையில் இன்று......
விலையில் ஒன்று!
ஆற்றங் கரைதனில்
அறுத்து வந்த
'பன்-புல்'லை அழகாய் வாட்டி
பலவர்ணச் சாயமும் ஏற்றி.....
படுக்கப் பாய் இழைத்து
பனை யோலையால்......
பெட்டி தட்டு விசிறி செய்து
சிக்கனமாய் வாழ்ந்த - அந்தச்
சீர்மையான காலம்
மீண்டும் வருமோ!
****