Saturday, October 6, 2012

பிள்ளை நேயக்கல்வி போதிக்கவந்த நீலப்படம்!

 
                         அண்மையில் பொத்துவில் கல்விவலய பாடசாலை ஒன்றில் பிள்ளைநேயக்கல்வி சம்மந்தமான கருத்தரங்கு ஒன்று ஆரம்பப் பிரிவிலிருந்து கல்விகற்ற அதிகாரி ஒருவரினால் நடாத்தப்பட்டதாம்.

இதன்போது பிள்ளைநேயக்கல்வி பற்றிய குறுந்திரைப்படம் ஒன்றும் திரையிடப்பட்டதாம். 
 
திரையைப் பார்த்துக்கொண்டிருந்த  பெற்றோரும் மாணவர்களும் முகத்தைச் சுழித்துக்கொண்டு அருவருப்போடும் வியப்புடனும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டார்களாம். 
 
நடந்தது என்ன?

பென் ட்ரைவ்(Pen Drive) மாறிவிட்டதால் அங்கே தென்பட்டது...........  நீலப்படமாம்!!


Tuesday, October 2, 2012

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் "திவிநெகும" திட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது!!!


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக அரசாங்கத்தின் பிரதானமான நிகழ்ச்சித்திட்டமான "திவிநெகும" நிகழ்ச்சித்திட்டம் இன்று கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் எதிராக வாக்களித்தன.

திவிநெகும் சட்ட மூலத்தை ஒன்பது மாகாண சபைகளின் அங்கீகாரத்தின் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் பணித்ததற்கு அமைவாகவே அரசாங்கத்தினால் ஒவ்வொரு மாகாண சபைகளிலும் சமர்பிக்கப்படுகிறது.

வடமாகாண சபை இயங்காத இத்தருணத்தில் எப்படி இது சாத்தியப்படும் என சமுர்த்தி அதிகாரசபையின் ஊடகப் பிரிவு அதிகாரியான சேனக உபேசிங்க என அவர்களிடம் வினவியபோது.......

"இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில சட்டமூலங்கள் மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்கு அனுப்பப்பட்ட சமயங்களில் வட மாகாண ஆளுநரே அங்கீகாரம் வழங்கினார்" என அவ்வதிகாரி குறிப்பிட்டார். 

"மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான அதிகாரங்களை மாகாணசபையிலிருந்து முற்றாக மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து, இந்த அபிவிருத்தி தொடர்பான முழுப்பொறுப்பையும் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு என்ற திட்டமே இந்த திவிநெகும சட்டமுலமாகும்" என ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைத்தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலி தெரிவித்திருந்தார்.


எனினும் இச்சட்டமுலம் தொடர்பில் கலந்தாலோசிக்க காலஅவகாசம் தேவை என கோரிக்கை விடுக்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Monday, October 1, 2012

அரை நூற்றாண்டுக்கு பின் அவதாரம் எடுத்த கட்டடம்!


                              ஐம்பது வருடங்களுக்குப்பின் பொத்துவில் பிரதேச சபைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று (2012-09-29 சனிக்கிழமை) நடைபெற்றது. 

                          பொத்துவில் பிரதேச சபைக்கு சொந்தமான பொத்துவில் பிரதான வீதியில்  (MOH அலுவலகத்திற்கு அருகாமையில்) அமைந்துள்ள  குறித்த  வளவிற்குள் இந்த 3 மாடி கட்டடம் 2 கோடி ரூபா செலவில் அமையப்படவிருக்கிறது. 

                  இவ்வைபவம், பொத்துவில் பிரதேச சபைத்தலைவர் கௌரவ அப்துல் வாஸீத் அவர்களின் தலைமையின் கீழ் அமைச்சர் அதாஉல்லா அவர்களும் கிழக்குமாகாணசபை அமைச்சர் உதுமாலெப்பை அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

                இந்நிகழ்வின்போது நடைபெற்றுமுடிந்த தரம் 5ற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் 2ம் இடம்பெற்றுக்கொண்ட  தாறுல் பலாஹ் பாடசாலை மாணவிக்கு அமைச்சர் அதாஉல்லாஹ்வினால் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

பொல்லடி கொண்டு வரவேற்கப்படும் போது 

பேண்ட் வாத்திய முழக்கங்களுடன்


தேசியக்கொடி ஏற்றும்போது

தவிசாளர் அடிக்கல் நாட்டும்போது



"எப்படியான சந்தோஸங்கள் வந்தாலும்
கல்வியின் வெற்றியில் கிடைக்கும்
சந்தோஸமோ தனிச்சுகம்தான்"


புலமைப்பரிசில் பரீட்சையில்
அம்பாறை மாவட்டத்தில் 2ஆம் இடம் பெற்ற
 மாணவிக்கு பொற்கிழி வழங்கும்போது