இடுகைகளுக்கான உங்களது கருத்துக்கள் எங்கள் வளர்ச்சிக்கு தீனிபோடும்....
உங்களது கருத்துக்களை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்பதை மறவாதீர்கள்!
எங்கள் தலைவர்கள்?
பேரினவாதக் கட்சிகளின்
பிடியிலிருந்து பிரிந்து வந்து
தனிக்கட்சி அமைத்தீர்கள்!
இனத்தின் அபிலாஷைகளை
வென்றெடுக்க வந்த -
போராளிகள் என்றீர்கள்!
இனத்தை அடகு வைத்து
அரச ஆசனங்களை அடைந்து
உங்கள் சுகத்தைக் காத்தீர்கள்!
அறிக்கைகளால்
பிடியிலிருந்து பிரிந்து வந்து
தனிக்கட்சி அமைத்தீர்கள்!
இனத்தின் அபிலாஷைகளை
வென்றெடுக்க வந்த -
போராளிகள் என்றீர்கள்!
இனத்தை அடகு வைத்து
அரச ஆசனங்களை அடைந்து
உங்கள் சுகத்தைக் காத்தீர்கள்!
அறிக்கைகளால்
தலைமைக் கதிரைகளை
அலங்காரம் செய்தீர்கள்!
மறைந்த தலைவரின்
திருநாமத்தை -
தாரக மந்திரமாய் ஓதி....
மக்களை மயக்கினீர்கள்!
அலங்காரம் செய்தீர்கள்!
மறைந்த தலைவரின்
திருநாமத்தை -
தாரக மந்திரமாய் ஓதி....
மக்களை மயக்கினீர்கள்!
ஒற்றுமை ஒன்றையே
நித்தமும் செப்பிய நீங்கள்....
வேற்றுமைகளையே
அறுவடை செய்தீர்கள்!
'தனித்துவக் கட்சி' என்றீர்கள்
'இறை வேதமே -
எங்கள் யாப்பு' என்றீர்கள்!
இன்றோ....
ஆளுக்கொரு கட்சியில்
தனித் தனியே நிற்கிறீர்கள்!!
வாக்குப் போட்டோம்;
உங்கள் வாக்குகளை நம்பி!
வந்து விட்டீர்கள்;
ஊருக்கொரு எம்.பி!
வென்று விட்டீர்களா?
எங்கள் அபிலாஷைகளை!!
'அரசியல் முகவரி' இல்லாது
அவதிப்பட்ட நமது இனம்,
நிழல் பெற நாட்டினீர்கள்;
சின்னமாய் ஓர் ஆலமரம்!
வளம் தந்த மரத்தை
பிளந்தீர்கள்; நாலைந்தாய்!
அடிமரம் ஆருக்கென்று
அடிபிடிப்பட்டீர்கள்!
இன்று நீங்கள்
அரச மரநிழலிலே
அமைச்சராய் நிற்கிறீர்கள்!
ஆளும் வர்க்கத்தோடு
அண்டி இருந்து கொண்டு -
'வண்டி' வளர்க்கின்றீர்கள்!!
அமைச்சராய் நிற்கிறீர்கள்!
ஆளும் வர்க்கத்தோடு
அண்டி இருந்து கொண்டு -
'வண்டி' வளர்க்கின்றீர்கள்!!
'அதிகாரப் பகிர்வு'
என்ற போதெல்லாம்
போராடி நின்றவரிடம்
சரிபாதி கேட்டு
சண்டித்தனம் காட்டினீர்கள்!
"தமிழ்மொழி நமக்கும்
தாய்மொழி" என்றீர்கள்;
தாயின் உரிமைக்காய்
சேய்கள் நீங்கள்
செய்தவை என்ன?
சிங்கத்தின் வாலாய் நின்று
வடக்கையும் கிழக்கையும்
வெட்டிப் பிளக்க
வாளேந்தி வந்தீர்கள்!
இத்தனையும் போதாதென்று
பேரினவாதத் தலைவர்களின்
தேர்தல் குதிரைகளிலே
தெருத் தெருவாய் யெங்கும்
சவாரி வருகிறீர்கள்!
கடந்த காலங்களில்
நடந்தவை யெல்லாம்
பொய் என்பீர்கள்!
எதிர்கால வாக்குறுதிகளில்
நம்பிக்கை வையுங்கள்;
என்று இனிக்கப் பேசுவீர்கள்!
ஏமாற்றங்களைச் சுமந்து
உதிர்ந்து போன இலைகள் நாங்கள்;
காய்ந்து சருகாகி
மனங் கசந்து போய்
நிற்கிறோம்; போங்கள்!!
உதிர்ந்து போன இலைகள் நாங்கள்;
காய்ந்து சருகாகி
மனங் கசந்து போய்
நிற்கிறோம்; போங்கள்!!
* * *