சற்று நேரத்திற்கு முன் (2013-07-17 11.30 a.m.) பொத்துவில் 'கொச்சிர சந்தியில்' வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
உகந்தை மலை முருகனை தரிசித்துவிட்டு ஊர் திரும்பும் வழியிலே வெளியூரைச் சேர்ந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
முன்னால் வேகமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பாதையின் ஓரத்திற்கு மாறுவதற்கு முற்பட்ட வேளையிலே பின்னால் வேகமாக வந்த ஆட்டோ மோதியது.
மோதலில் மோட்டார் சைக்கிள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியது. எனினும் மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு பெரிதாக காயம் ஒன்றும் ஏற்படவில்லை.
சம்மந்தப்பட்ட இருவரும் சமரசமாக பேசியதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
சென்ற செவ்வாய்க்கிழமை(2013-07-11) கூட உகந்தையிலிருந்து ஊர் திரும்பும் வழியில் பொத்துவில் பகுதியில் ஓர் ஆட்டா விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது........