Wednesday, July 17, 2013

உகந்தை வழியில் மற்றுமொரு விபத்து!


சற்று நேரத்திற்கு முன் (2013-07-17 11.30 a.m.) பொத்துவில் 'கொச்சிர சந்தியில்' வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

உகந்தை மலை முருகனை தரிசித்துவிட்டு ஊர் திரும்பும் வழியிலே வெளியூரைச் சேர்ந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

முன்னால் வேகமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பாதையின் ஓரத்திற்கு மாறுவதற்கு முற்பட்ட வேளையிலே பின்னால் வேகமாக வந்த ஆட்டோ மோதியது.

மோதலில் மோட்டார் சைக்கிள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியது. எனினும் மோட்டார் சைக்கிளில்  வந்தவருக்கு பெரிதாக காயம் ஒன்றும் ஏற்படவில்லை.

சம்மந்தப்பட்ட இருவரும் சமரசமாக பேசியதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

சென்ற செவ்வாய்க்கிழமை(2013-07-11) கூட உகந்தையிலிருந்து ஊர் திரும்பும் வழியில் பொத்துவில் பகுதியில் ஓர் ஆட்டா விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது........






Thursday, July 11, 2013

பாதி வழியில் கோர விபத்து!!


பொத்துவில் ஊரணி பகுதியில் இன்று (2013-07-11) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பயணிகள் பெரும் காயங்களுக்குள்ளானதோடு வாகனத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

உகந்தை மலை முருகனை தரிசித்துவிட்டு ஊர் நோக்கி சென்ற காரைதீவு மக்களே விபத்துக்குள்ளானர்.

மிகவேகமாக சென்ற ஆட்டோ நிலைதடுமாறி ஊரணி பாலத்தருகில் இருமருங்கிலும் உள்ள பாதுகாப்பு கட்டைகளில் மோதி பல தடவை உருண்டு புரண்டு வீதியின் அடுத்த பக்கத்தில் கிடந்தது.

ஆட்டோ சாரதி மற்றும் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு மத்தியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.