Monday, August 20, 2012

தொலைத்தொடர்பு கோபுரத்தால் வரவிருக்கும் 'மகா துயரம்'


அனைருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் 
ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

          இலங்கையில் தற்போது தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் பிரபல்யமான தனியார் நிறுவனம் ஒன்று பொத்துவிலில் தனது தொலைத்தொடர்பு சேவையை விரிவாக்கும் முகமாக மக்கள் மிகவும் செறிவாக வசிக்கும் பொத்துவிலின் நடுப்பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தை நிறுவுவதற்கான அத்திவாரம் இட்டு படுவேகமாக வேலைகளை நிகழ்த்தும் இத்தருணத்தில்....

என்னதான் நடந்தாலும் தனக்கு வருமானம் வந்தால் போதும் என்று என்னும் குறித்த நிறுவனமும்....

பல திறந்த வெளிகள்  இருந்தும் கூட மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடத்தில் கோபுரத்தை கட்டுவதற்கு அனுமதி அளித்த மக்கள் நலன் மீது பெரிதும் அக்கறை கொண்ட பொத்துவில் பிரதேச சபைத்தலைவரும்......

இதை கொஞ்சம் பாருங்களேன்..
 
"மொபைல் கோபுரம் அருகில் வசிக்கிறீர்களா? மூளை பாதிக்கப்படும்"
 
உங்களுடைய வீடு அல்லது வேலை பார்க்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மொபைல் போன் சிக்னல்களை வாங்கி அனுப்பும் டவர்கள் இருக்கின்றனவா? இது மைக்ரோவேவ் அடுப்பின் உள்ளே 24 மணி நேரம் இருப்பதற்கு சமம் என்று மும்பையில் உள்ள ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் பிரிவின் பேராசிரியர் கிரிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்ற 2010 டிசம்பரில் இவர் இந்த ஆய்வு முடிவினை மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ஓர் அறிக்கையில் அளித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பல துறைகளுக்கான அமைச்சரவை இணைந்து மொபைல் போன் டவரின் மின் காந்த அலைக்கதிர் வெளிப்பாட்டினைக் 450 mw/sq m  என்ற அளவிற்குக் கட்டுப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தன. ஆனால் இன்றுவரை இது அமல்படுத்தப்படவில்லை என பேரா. குமார் தெரிவித்துள்ளார்.

இது சார்ந்து மேற்கொண்ட இன்னொரு ஆய்வில் இந்த கோபுரங்கள் அருகே வசிப்பவர்களில் ஒரு சிலருக்கு மூளையில் கேன்சர் நோய் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மிக அருகே வசிப்பவர்களுக்கு தூக்கமின்மை தலைவலி மயக்கம் மூட்டுவலி போன்றவையும் வரலாம். தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் கட்டி போன்றவை வர வாய்ப்புள்ளதாக புது டில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் அறுவை மருத்துவர் டாக்டர் சமீர் கௌல் தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்பு மென்மையான தலை ஓட்டினைக் கொண்டுள்ள சிறுவர்களிடம் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் மொபைல் போன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கான அமைப்பு இதனை மறுத்துள்ளது. அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் கதிர்வீச்சுடன்தான் தற்போது மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே பாதிப்பு வர வாய்ப்பில்லை என்று அந்த அமைப்பின் முதன்மை இயக்குநர் மாத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார்.

கோபுரங்கள் பாதுகாப்பாகத்தான் இயங்குகின்றன என்றால் ஏன் அது குறித்து இத்தனை சட்டங்களும் ஆய்வுகளும் இருக்கின்றன என்று பொது நல அமைப்பாளர்கள் கேட்கின்றனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கோபுரங்கள் உள்ள இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.

நன்றி  www.senthilvayal.wordpress.com

மேலதிக தகவலுக்கு 

Saturday, August 4, 2012

பொத்துவில் பிரதேசசபைத் தலைவர் "வாஸித்" அவர்களே! இதை வாசித்தறிவீர்களா!!

                                
                    பொத்துவில் நகரின் அனைத்து பிரதான மற்றும் உள் வீதிகளில் மும்மொழிகளிலும் வீதிப் பெயர்ப்பலகைகள் நடப்பட்டுள்ளன. 'கிக்கோலா' நிறுவனத்தின் அனுசரனையுடன் பொத்துவில் பிரதேச சபையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. மிகவும் பாராட்டப்படக்கூடிய விடயம். முதற்கண், பொத்துவில் பொதுமக்கள் சார்பாக பிரதேச சபைக்கும் குறித்த அனுசரனையாளருக்கும் மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

     என்னதான் அத்தி பூப்பதுபோல் புதுப்புது எண்ணங்கள் எமது பிரதேசசபைக்கு தோன்றினாலும் அது அரைகுறையாக காட்சி தருவதுதான் அருவெறுப்பாய் இருக்கிறது.

                 சில வீதிகளின் பெயர்கள், தமிழில் எழுதியிருக்கும் விதம் என்ன என்று விளங்கவேயில்லை..... 
எழுத்துப்பிழை ஒரு பக்கம்! 
வீதிகளின் பெயர்கள் பெயர்ப்பலகையின் இடமாற்றத்தால் தடுமாற்றம்.....
இது எழுத்துப்பிழையா... இல்லை இதுதானா, இந்த வீதியின் பெயர் என்ற குழப்பம் மறுபக்கம்!!

               பொத்துவிலின் ஹிதாயாபுரம் நகரில் "அல்-முனௌவரா பள்ளிவாயல் வீதி" என்று எழுத வேண்டிய பெயர்ப்பலகையில் அல்-முனௌவறரா என்று "ற" வை இழுத்துக் கொண்டிருக்கிறது பொத்துவில் பிரதேச சபை. இதில் வேடிக்கை என்னவென்றால், உண்மையாகவே இப்பெயர்ப்பலகை பொத்துவிலின் கொடிமரத்தடி அருகில் உள்ள பள்ளிவாயல் வீதியாக குறிப்பிட வேண்டியது ஏறத்தாள ஒரு கிலோமீற்றர் பின்னோக்கி வந்து அல்-முனீரா மஸ்ஜித் வீதியில் வைக்கப்பட்டதுதான். மேலும் அதே 'வட்டை'யில்தான் பொத்துவில் பிரதேச சபைத்தலைவர் "வாஸித்" வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடிமரத்தடியில் பல்வேறு இடமாற்றங்களுக்குப்பின் எழுத்துப்பிழைகளுடன் வந்துசேர்ந்த பெயர்ப்பலகை






             எனினும், பெயர்ப்பலகையின் இடமாற்றநிலை கண்டு குறித்த வீதிகளில் வசிப்போர் பெயர்ப்பலகை நாட்டியோரிடம் சொன்னதால் இன்று(2012-08-04) பொருத்தமான இடங்களில் பெயர்ப்பலகை இடப்பட்டது.

மேலும்......
பொத்துவிலின் பிரதான வீதியோடு தொடர்புபடும் இன்னொரு வீதியின் பெயர்ப்பலகையின்  கொடுமையை என்னவென்று சொல்ல....
"நாவலடி வீதி" என்று இடவேண்டிய இடத்தில் "நாவையடி வீதி"  என்று இட்டிருப்பதுதான் அடுத்த கொடுமை......
தமிழ் பேசும் கிழக்கு மாகாணத்தில் தமிழுக்கு நேர்ந்த கதியென்னவோ....




                   இதில் "வாத்தியார் வீதி"யென்றும் ஒரு வீதி உள்ளது. எந்த வாத்தியார் என்றுதான்.... தெரியவில்லை!

              இப்படியான.. பெயர்ப்பலகையின் மொழிப்பிரச்சனைகள் நாடு பூராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் அவை வேற்று மொழி பெரும்பான்மையோர் வாழும் பகுதிகளிலே காணப்படுவது வழமை. அது தொடர்பில் வாய்கிழிய பேசும் நாம், நம் பிரதேசத்தில் நம்மாளே அதே பிரச்சனையை உண்டாக்குவதுதான் வேடிக்கையானது.

இந்த வீதிகள் தொடர்பான செய்திகள் தொடரும்.........