Friday, June 29, 2012


அடிப்படைத் தேவைக்குள் அடிபுடி!


அம்பாறை மாவட்டம் பொத்துவில் நகரில் விவசாயிகள் தற்போது தண்ணீரில்லாப் பிரச்சனைக்கு பெரிதும் ஆளாகியுள்ளனர். வழமைக்கு மாறாக இந்நிலை ஏற்படக்காரணம் என்ன!! என எமது குழாம் தேடியறிந்து பெற்ற முக்கியமான தகவல்களை உங்களிடம் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறது.

கண்டத்திலுமா.........(பொத்துவிலில் பிரசித்திபெற்ற காணிப்பிரதேசம் இது) தண்ணியில்ல!!!
பொக்குவாய்க் கிழவர்களின் பெருமூச்சு!

'படித்தவர்கள்' பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேச்சு!!!

முஸ்லிம்களின் நீதியமைச்சு............. என்ன ஆச்சு!!!!!


பெரும்பாலும் விவசாயமே வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொள்ளப்படும் பொத்துவில் நகரில் ஒவ்வொரு வருடமும் ஏறத்தாள 16 000 ஏக்கர் நெற்செய்கைக் காணிகள் இருக்கின்றன.இதில் குறிப்பாக பெரும்போகத்திற்கு 12 000 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோகத்திற்கு 6 000 ஏக்கர் நிலப்பரப்பிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.. ஒவ்வொரு வருடமும் கோடை, மாரி என மாறி மாறி வருவதுண்டு. நீர்ப்பிரச்சனை ஏற்பட்டால் அது விரைவில் தீர்க்கப்படும். பிரச்சனையாகக் கொள்ளப்படுவதில்லை. என்றாலும் இம்முறையோ நெற்செய்கைக்காக பயன்படும் ஆறுகளில் கை கழுவுவதற்குக்கூட தண்ணீரில்லாப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. வயலுக்கு நீர்பாய்ச்ச தண்ணீர்ப் பம்புகள் வாடகைக்கு எடுக்க நேரம் போதாததால் 100க்கும் அதிகமான நீருந்தும் பம்ப்கள் விற்றுத்தீர்ந்துவிட்டன.

நாவலாறு, இரத்தல்குளம், ரொட்டைக்குளம், செம்மணிக்குளம், செங்காமம் குளம் என பல்வேறு நீர் நிலைகளிலிருந்து நீர் பெறப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக பொத்துவிலின் மேற்குப்பகுதியிலிருந்து வரும் "ஹெட் ஓயாவி"ன் வடிச்சல் ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிந்து நாவலாறு வழியாக ஒரு கிளையும் ஜமாந்துறை கண்டம் வழியாக ஒரு கிளையும் வருகைதந்து பெரும்பாலான பொத்துவில் வயலுக்கு நீர் கிடைக்க வழிசெய்கின்றன.

அது சரி......
இப்படியெல்லாம் நீர் நிரம்பி வழியும்போது ஏன் இந்தப் பஞ்சநிலை என எண்ணத்தோனுகிறதா......


நாவலாற்றின் தற்போதைய நிலை

சரி என்னுடன் நீங்கள் கடந்த 4 வருடங்கள் பின்னோக்கி வாருங்கள். சரி இப்போ நாம் 2007ஜுன் மாதத்தில் இருக்கிறோம். சரியா.............

சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொத்துவில் நகரில் மீள்கட்டுமானம் என்ற பெயரில் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றன. அதில் ஒரு சேவையாக அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனத்தின் ஏறத்தாள 2,000 மில்லியன் நிதிஉதவியுடன் 40,000 குடும்பங்கள் பயன்பெறுமளவிற்கு பொத்துவிலின் உல்லை பகுதியில் நீர்த்தாங்கி நிறுவப்பட்டு மக்களுக்கு தேவையான குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க வழிசெய்யப்பட்டது. ("அந்தளவுக்கு" குடிநீர்ப் பிரச்சனையில்லாத பொத்துவிலூருக்கு இது தேவைதானா.......)

பொத்துவில் - உல்லை பகுதியில்
அமையப் பெற்றிருக்கும் தண்ணீர்த்
தாங்கி

இவ் நீர்த்தாங்கிக்கு தேவையான நீர் நாவலாற்றிலிருந்தே எடுக்கப்பட்டுவந்தது. அங்குதான் தோண்டப்பட்டது இப்போதைய தண்ணீர்ப்பிரச்சனைக்கான அத்திவாரம்.

தேவையான நீர் நாவலாற்றில் நிலத்திற்கு கீழிருந்து எடுக்கப்பட்டது. நீரை எடுக்க எடுக்க நிலத்தடி நீர் குறைந்து நிலத்திட்கு மேல் உள்ள நீர் நிலத்திற்கு கீழ் சென்றது. சென்ற நீர் குழாய் மூலம் தண்ணீர்த்தாங்கிக்கு நிரப்பப்பட்டது. ஆறும் வற்றிவிட்டது. கூடவே கோடையும் வந்ததால் வயலும் காய்ந்துவிட்டது. இப்போது புரிகிறதா... எங்கு பிரச்சனை என்று.

தண்ணீர்ப் பஞ்சத்தால் கருகும் தன்
வேளாண்மையை எண்ணி வருந்தும் விவசாயி

மேலும் உகந்தை, கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் இந்த நாவலாற்றில் தங்கி; உணவருந்தி தேவையான தண்ணீரையும் பெற்றுக்கொண்டு செல்வர். அதற்கும் இப்போது முடியாத நிலையாகிவிட்டது

''வேரை அறுத்துவிட்டு ஏன் "பூ" பூக்கவில்லை என்று கேட்டால் யான் என்ன செய்ய.....''

அது சரி நீங்கள் சினிமாப்படம் பார்ப்பதுண்டா..........

கொஞ்சம் இந்தப் படத்தை 'திரும்பியும்' பாருங்கோ...... இதே பிரச்சனை ஏற்பட்டு இந்திய கிராமமொன்றுக்கு ஏற்பட்ட பஞ்ச நிலைமையை...

நடிகர் சரத்குமாரும் நடிகை நயன்தாராவும் வடிவேலுவும் சேர்ந்து நடித்த 'தலைமகன்' என்ற திரைப்படம்தான்.

சரி நடந்தது நடந்துவிட்டது என்னதான் நங்க செய்யனும் என்னு கேக்குறீங்களா...

தீர்ப்ப நாங்க சொல்லுறம் கேளுங்கோ..

இப்படி........ ''இனிமேலும் வரும்! நீங்களும் இப்படித்தான் கேட்பீங்க... நாங்களும் இதுபோல தான் எழுதுவம்''
இதுவே சிறந்த தீர்ப்பு.


என்றாலும்......

இவ் நீர்வழங்கும் திட்டத்தை கொண்டுவந்த குறித்த அரச சார்பற்ற நிறுவனமும் அதற்கு அனுமதி வழங்கிய அரச அதிகாரிகளும் பொத்துவில் மக்களின் இந்நிலையறிந்து உதவிக்கரம் நீட்டுவீர்கள் என நம்புகிறோம்.

மேலதிக தகவல்களுக்கு
http://srilanka.usaid.gov/programme_tr_description.php?prog_id=4