மாறாத உண்மைகள்!
கடலும் - கண்மூடித்
தூங்கு வதில்லை;
காற்றும் - மௌனித்து
நிற்பதில்லை!
போற்றும் உடலும்
இறக்காமல் இருப்பதில்லை;
காக்கும் உயிரும்
பறக்காமல் வாழ்வதில்லை!
தேனும் மலரில்
நிலைப்பதில்லை;
தேடிய செல்வமும்
நிரந்தர மில்லை!
தேக சுகமும்
தொடர்ந்து வருவதில்லை;
தேவைகள் ஒரு போதும்
குறைந்து போவதுமில்லை!
நன்றி கொன்ற நாயை
கண்டதில்லை;
நன்றியுள்ளவரைக் -
காண்பதின்று சுலபமில்லை!
அகிம்சை வாழ - இங்கு
காந்தி மனமில்லை;
சனங்களின் மனங்களில்
சாந்தியைக் காணவில்லை!
உண்மையை உணர்ந்தவன் -
உலக - மாயையை நம்புவதில்லை;
தன்னையே உணராது
வாழ்பவர் மனிதரில்லை!