Thursday, July 11, 2013

பாதி வழியில் கோர விபத்து!!


பொத்துவில் ஊரணி பகுதியில் இன்று (2013-07-11) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பயணிகள் பெரும் காயங்களுக்குள்ளானதோடு வாகனத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

உகந்தை மலை முருகனை தரிசித்துவிட்டு ஊர் நோக்கி சென்ற காரைதீவு மக்களே விபத்துக்குள்ளானர்.

மிகவேகமாக சென்ற ஆட்டோ நிலைதடுமாறி ஊரணி பாலத்தருகில் இருமருங்கிலும் உள்ள பாதுகாப்பு கட்டைகளில் மோதி பல தடவை உருண்டு புரண்டு வீதியின் அடுத்த பக்கத்தில் கிடந்தது.

ஆட்டோ சாரதி மற்றும் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு மத்தியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.











No comments:

Post a Comment