Sunday, August 7, 2011

எங்களைத் தெரியுமா?


பண்டைக் கால
பாரம்பரியங்கள்
இன்றுவரை....
இறந்து போகாமல்
காத்து வருகிறோம்;


நீதி வழுவா மன்னவர்,
நிழலும் புகழும்
செங்கோல் அறவும்
செழித்தே விளங்க
எங்கள் குலமும்
உழைத்தே வந்தது!


அரியணை மேலே,
அருகே...
அழகாய் நின்று
அரச பரம்பரையின்
அந்தஸ்தினையும்
உயர்த்தி நிறுத்தியவர்
எங்கள் இனத்தவரே!


வெண்மையாய் மட்டும்
வீற்றிருந்தோம் அன்று!
இன்றோ....


நிற வேறுபாடுகளும்
இனப்பாகு பாடுகளும்
எங்களிலும்
நிறையவே உண்டு!





ஆண் - பெண்
பால் வேறுபாடுகளும் - எங்களை
பல கூறுகள் போடுவதுண்டு!


பலரும்
பல் விழுந்தோரும் - எங்களை
இனங்கண்டு
பாதுகாப்பதுமுண்டு!


அரச குலம் -
மறைந்து போனதால்...
இறந்து போனது;
எங்கள் குலப் பெருமைகள்!


அதனால்....
நாய் பேய்களுக் கெல்லாம்
நாங்களின்று -
நல்ல - அடிமைகளானோம்!


நகரும் போது....
மண் பார்த்து நடந்தாலும்
தூங்கும் போது,
தலைகீழாய்
தொங்கியே ஆகுவோம்!


பொழியும் மழையும்
எங்கள் முதுகில்தான்;
சுட்டெரிக்கும்
சூரியனும்
பட்டுத் தெறிப்பது
எங்கள் மேனியல்தான்!


மரம் ஒன்றே யொன்று;
இலையும் ஒன்றேதான்;
என்றாலும்....
கிளைகளோ 
எட்டுத் திக்கும்
எட்டி நிற்கும்!'


விடுகதை யிது;
விடுவித்தால்....
விடை....
குடையென விரியும்!


                  














No comments:

Post a Comment