Sunday, August 14, 2011


மாறாத உண்மைகள்!

கடலும் - கண்மூடித்
தூங்கு வதில்லை;
காற்றும் - மௌனித்து
நிற்பதில்லை!

போற்றும் உடலும்
இறக்காமல் இருப்பதில்லை;
காக்கும் உயிரும்
பறக்காமல் வாழ்வதில்லை!


தேனும் மலரில்
நிலைப்பதில்லை;
தேடிய செல்வமும்
நிரந்தர மில்லை!

தேக சுகமும்
தொடர்ந்து வருவதில்லை;
தேவைகள் ஒரு போதும்
குறைந்து போவதுமில்லை!

நன்றி கொன்ற நாயை
கண்டதில்லை;
நன்றியுள்ளவரைக் -
காண்பதின்று சுலபமில்லை!

அகிம்சை வாழ - இங்கு
காந்தி மனமில்லை;
சனங்களின் மனங்களில்
சாந்தியைக் காணவில்லை!

உண்மையை உணர்ந்தவன் -
உலக - மாயையை நம்புவதில்லை;
தன்னையே உணராது
வாழ்பவர் மனிதரில்லை!














3 comments:

  1. நன்றி உன் பஞ்ச்!!

    ReplyDelete
  2. நன்றி கொன்ற நாயை
    கண்டதில்லை;
    நன்றியுள்ளவரைக் -
    காண்பதின்று சுலபமில்லை

    unmai than..

    ReplyDelete