Tuesday, October 2, 2012

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் "திவிநெகும" திட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது!!!


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக அரசாங்கத்தின் பிரதானமான நிகழ்ச்சித்திட்டமான "திவிநெகும" நிகழ்ச்சித்திட்டம் இன்று கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் எதிராக வாக்களித்தன.

திவிநெகும் சட்ட மூலத்தை ஒன்பது மாகாண சபைகளின் அங்கீகாரத்தின் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் பணித்ததற்கு அமைவாகவே அரசாங்கத்தினால் ஒவ்வொரு மாகாண சபைகளிலும் சமர்பிக்கப்படுகிறது.

வடமாகாண சபை இயங்காத இத்தருணத்தில் எப்படி இது சாத்தியப்படும் என சமுர்த்தி அதிகாரசபையின் ஊடகப் பிரிவு அதிகாரியான சேனக உபேசிங்க என அவர்களிடம் வினவியபோது.......

"இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில சட்டமூலங்கள் மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்கு அனுப்பப்பட்ட சமயங்களில் வட மாகாண ஆளுநரே அங்கீகாரம் வழங்கினார்" என அவ்வதிகாரி குறிப்பிட்டார். 

"மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான அதிகாரங்களை மாகாணசபையிலிருந்து முற்றாக மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து, இந்த அபிவிருத்தி தொடர்பான முழுப்பொறுப்பையும் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு என்ற திட்டமே இந்த திவிநெகும சட்டமுலமாகும்" என ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைத்தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலி தெரிவித்திருந்தார்.


எனினும் இச்சட்டமுலம் தொடர்பில் கலந்தாலோசிக்க காலஅவகாசம் தேவை என கோரிக்கை விடுக்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment