Monday, October 1, 2012

அரை நூற்றாண்டுக்கு பின் அவதாரம் எடுத்த கட்டடம்!


                              ஐம்பது வருடங்களுக்குப்பின் பொத்துவில் பிரதேச சபைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று (2012-09-29 சனிக்கிழமை) நடைபெற்றது. 

                          பொத்துவில் பிரதேச சபைக்கு சொந்தமான பொத்துவில் பிரதான வீதியில்  (MOH அலுவலகத்திற்கு அருகாமையில்) அமைந்துள்ள  குறித்த  வளவிற்குள் இந்த 3 மாடி கட்டடம் 2 கோடி ரூபா செலவில் அமையப்படவிருக்கிறது. 

                  இவ்வைபவம், பொத்துவில் பிரதேச சபைத்தலைவர் கௌரவ அப்துல் வாஸீத் அவர்களின் தலைமையின் கீழ் அமைச்சர் அதாஉல்லா அவர்களும் கிழக்குமாகாணசபை அமைச்சர் உதுமாலெப்பை அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

                இந்நிகழ்வின்போது நடைபெற்றுமுடிந்த தரம் 5ற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் 2ம் இடம்பெற்றுக்கொண்ட  தாறுல் பலாஹ் பாடசாலை மாணவிக்கு அமைச்சர் அதாஉல்லாஹ்வினால் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

பொல்லடி கொண்டு வரவேற்கப்படும் போது 

பேண்ட் வாத்திய முழக்கங்களுடன்


தேசியக்கொடி ஏற்றும்போது

தவிசாளர் அடிக்கல் நாட்டும்போது



"எப்படியான சந்தோஸங்கள் வந்தாலும்
கல்வியின் வெற்றியில் கிடைக்கும்
சந்தோஸமோ தனிச்சுகம்தான்"


புலமைப்பரிசில் பரீட்சையில்
அம்பாறை மாவட்டத்தில் 2ஆம் இடம் பெற்ற
 மாணவிக்கு பொற்கிழி வழங்கும்போது

No comments:

Post a Comment