விலை போகுமோ வாலிபம்?
கோழை யென்றாய்
கொள்கை யற்ற -
ஆண்மை யென்றாய்!
கல்யாணச் சந்தையிலே
விலை போகும் - நவயுக
காளை யென்றாய்;
ஏழை நான்.....
என் செய்வேன்!
பெட்டியிலே..... பணம்
இருந்தால்தானே....
அட்டியலாய் - உன்
சங்குக் கழுத்தில் -
கட்டி விடலாம்....
பொற்றாலியை!
பத்துப் பவுணில்
பத்தரை மாற்றுத் தங்கத்தில்
பாவையுன் - காறை
எலும்பு மறைந்திடவே
போடவில்லை....
நகை யென்றால்.....
பொறுத்திடுவாயோ - இந்த
பொல்லாத உலகத்திலே!
அடங்காத - உன்
ஆசைத் தீக்கு -
பல மடங்காய்
தீனி போடத்தானே....
கேட்கிறோம் - சீதனமே !
*****
* இக்கவிதைக்கு எதிர்க்கவிதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
*அனுப்பிவைக்கப்படும் கவிதைகள் இக்கவிதையின் கீழ் பிரசுரமாகும்.
*அனுப்பி வைக்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி sirajmohamed21@gmail.com
முதல் மழை எனை நனைத்ததே...
ReplyDeleteதெவிட்டாத
ReplyDeleteதேன்பாவில் -
தொடர்ந்து நனையுங்கள்,
சுவைக்கும் போதெல்லாம் - என்னை
நினையுங்கள்!
பொத்திவில்- மழை அருமை
ReplyDeleteஅதிகம் நனைந்தாலும் சளி பிடிக்ககாத மழையிது
ReplyDeleteபசுக்களை விற்கும் சந்தையிலோ இருவர் மட்டும் கைகளை மூடி இரு உயிர்களை விலை பேசுகிறார்கள் ..............................
ReplyDeleteகல்யாண சந்தையிலோ ஊரே கூடி இரு மனங்களை விலை பேசுகிறார்கள் ..........................................
ஆகா மொத்தம் இரண்டுமே ஒன்றுதான் ................................
தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே இந்த தமிழ் இனிது வலைத்தளம்.
ReplyDeleteஇதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
ஃஃஃஃஅட்டியலாய் - உன்
ReplyDeleteசங்குக் கழுத்தில் -
கட்டி விடலாம்....
பொற்றாலியை!ஃஃஃஃ
ஆகா என் தமிழ் அப்படியெ உயிரோடு தான் இருக்கிறது...
பொத்துவிலிலிருந்து மாஸ்டர் ஏ.எல்.ஏ.முஹம்மத் said...
ReplyDeleteஅதிகம் நனைந்தாலும் சளி பிடிக்ககாத மழையிது//
அப்போ அடைமழை என்று சொல்லுங்கோ !
ஆமா! அதே.. அதே......
ReplyDelete