என்ன..... உலகமிது!
சாலை ஓரம் - நின்ற
எப்படி இருந்த நான்....
சாலை ஓரம் - நின்ற
ஆல மரம்,
இன்று..... சிறு
சாடியில் நிற்கிறது;
அதன்
நூல் விழுதுகளில்
ஊஞ்சலாடி....
மரபணு மாற்றத்தின்
பெருமைகளை பாடுகிறான்!
எப்படி இருந்த நான்....
இப்படியாயிட்டன்...........
இயற்கையோடு போராடி
புதிய உலகை
உருவாக்கி விட்டான்;
படைப்புகளின் பண்புகளை
சுருக்கி விட்டான்!
காற்றைச்
சுத்தப்படுத்த
காடுகள் இல்லையாம்;
மாசு படர்ந்த
காற்று மண்டலம்
கக்கிசப் படுகிறதாம்!
"ஓசோன்" படையிலும்
ஓட்டை விழுந்துவிட்டதாம்!
என்றாலும்.....
எங்கள் பூமாதேவி,
ரொம்ப புதுமையானவள்;
எத்தனையோ காதலரை
மணந்து கொண்டாலும்
இன்னுமவள்.....
கன்னி கழியாமலே
இருக்கிறாள்!
*****
கவிதை ரொம்ப நல்லா இருக்குதுங்க நண்பரே...! இன்னும் எதிர் பார்க்கிறோம் உங்களிடம் இருந்து. நம்ம கடை பக்கம் வந்துட்டு போனதற்கு நொம்ப நன்றிங்க . அப்பப்போ எட்டி பார்த்துட்டு போங்க நண்பரே ...!
ReplyDeleteஅப்புறம் ஒரு சின்ன டிப்ஸ் ,பின்னூட்டம் இடும் போது அந்த " வார்த்தை சரிபார்த்தல் " விஷயம் வேண்டாம் என் நினைக்கிறன் ...
ReplyDelete