இனியும் வேண்டாம்
இந்தக் கொடுமை!
ஊன்றி யிருக்கும்
மூன்று கற்களும்
செய்து கொண்ட ஒப்பந்தம்,
செயலிழந்து போய்....
மூன்று நாளாயிற்று!
அலைந்து திரிந்த -
கிழப்பூனை யொன்று
அடுப்படி முகாமிலே
முடங்கிக் கிடக்கிறது!
நாட்டின் -
வன்முறைக் கலாசாரத்தில்
தன் தாலியை -
பலிகொடுத்த
தாய்மை யின்று....
கூட்டுக் குள்ளே
குறுகிப் போய்
வீட்டுக் குள்ளே -
குந்தியழுகிறது!
வற்றிய வயிற்றின்
சுரப்பிகளின் -
கிளர்ச்சியினால்
பற்றியெரியும் பசிக்கு....
பாலாபிஷேகம் கோரி
பச்சிளம் மனசு,
குச்சிக் குடிசையுள்ளே
அழுகைப் புரட்சி செய்கிறது!
மச்சு வீட்டில்
பிறக்காதது,
மழலை செய்த குற்றமோ?
வந்தவர்க் கெல்லாம்
முந்தானை விரிக்க -
நினைக்காமல்....
ஒழுக்க வேலிக் குள்ளே
ஒடுங்கிக் கொண்டது
விதவை செய்த குற்றமா.......?
***
மிக அருமையான கவிதை
ReplyDeleteவந்தவர்க் கெல்லாம்
ReplyDeleteமுந்தானை விரிக்க -
நினைக்காமல்....
ஒழுக்க வேலிக் குள்ளே
ஒடுங்கிக் கொண்டது
விதவை செய்த குற்றமா.......?
தம்பீ
அவள் குற்றமல்ல இந்த சமுதாயம்
செய்த குற்றம்.
நல்ல கவிதை நல்ல சிந்தனை
வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்
நல்ல கவிதை...வாழ்த்துக்கள்..
ReplyDeleteகருத்துத் தெரிவித்த உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்
ReplyDelete