பல முகங்கள்!
மரண தண்டனை
விதிக்கப்பட்ட
ஆயுள்கால கைதி!
காலம்
மானிடரால்
மாசுபடுத்தப்பட்டு,
மறைமுகமாய்
நின்றழுது.....
கரைந்துருகும்
மெழுகுதிரி!
மனிதம்
மனித மனதி லிருந்து
இடம்பெயர்ந்த
அகதி!
கணவன்
குடும்பக் கோட்டையுள்ளே
தலைமைப் பதவியை
தக்கவைத்துக் கொள்ள
நித்தமும் போராடும்
தியாகி!
மனைவி
ஆளும் வர்க்கமாம்
ஆணினத்தின் பலமான
எதிர்கட்சித் தலைவி!
மாணவர்
பாடம் புரிகிறதோ....
இல்லையோ.....?
பள்ளிக்கு...
வருகை தரும்
வெள்ளை -
வண்ணத்துப் பூச்சிகள்!
ஆசிரியன்
வெள்ள நிவாரணம்
வேண்டாம்;
வறட்சி நிவாரண மாவது
வந்து சேராதோ.....?
என்றே... வாடி நிற்கும் -
அரச அநாதை!
பெற்றவர்
பெற்ற கடனுக்கு -
பிள்ளை....
கல்வி கற்றிட
பள்ளி எனும்
சிறையிலே...
தள்ளி விடும் -
ஜெயிலர்கள்!
கற்றவர்
சமூகத்தில் -
நடப்பது நடக்கட்டும்
'நமக்கேன் வீண் வம்பு'
என்று....
விலகி நின்று -
வேடிக்கை பார்க்கும்
நவயுக சுயநல வாதிகள்!
தனவந்தர்
'எல்லாம் எனக்குத்தான்
இறைவன் கொடுத்தான்!'
என்ற - வாதத்தால்...
இதயம்...
முடமாகிப் போன
தன - வேந்தர்கள்!
பொது மக்கள்
இவர்கள் -
எதற்குப் பொதுவானவர்கள்?
எனக்கப் புரியவில்லை!
சமூதாய வில்லர்களுக்கு
சரியான மதிப்பளிக்கும்
சன - நாயக மன்னர்கள்!
****
நல்ல கருத்துக்கள் அவற்றை
ReplyDeleteதந்து்ள்ள பாங்குஅருமை
வளர்க வாழ்க
புலவர் சா இரமாநுசம்