Sunday, May 6, 2012


கற்பிழந்த கவிதை மகள்!

உன் தனிமையை
இனிமையாக்க
கனிமொழியாய்
காதலியாய் - உன்
காலடி தேடிவந்தேன்!

எழுதுகோ லெனும்
தூரிகையால்....
காரிகை - என்
மேனியெங்கும்
சில்மிஷங்கள் செய்தாய்!

உன் கவித்துவம்
ஊரெல்லாம் மணக்க
தெருவெல்லாம் என்னைஇ
தேரேற்றி விட்டாயே!

வீரமே யில்லா
உன் நெஞ்சிலே - அது
உள்ளதாகவே சொல்ல
என் சொற்களுக்கு
தைரியம் பூசினாய்!

தகுதியே இல்லா
அரசியல் தலைவர்க்கு
போலிப் புகழ் பாடி....
வால்பிடிக்க வசதியாய்
பொய்மைகளால் எனை
புனைந்தாயே!

உன் கருத்தை
நீயே கற்பழித்து விட்டாய்;

காலமெல்லாம்
கற்புடனே வாழ்ந்த
என் வாழ்வினிலே....
களங்கத்தை கற்பித்தாயே!

கண்கெட்ட சமூதாயத்தின்
கருத்தினைத் திருத்திட - நீ
திடங்கொண்ட தெல்லாம்
தடம்புரண்டு போனதே!
 
உன் கருவையெல்லாம்
என்னுள்ளே....
புதைத்து வைத்தது....
உண்மையில்லையா....
வெறுங் கற்பனைதானா?

நேசத்தைப் பொழிந்த
உன் எண்ணங்களுக்கு
என் பாசத்தின் பரிணாமம்
புரிய வில்லையே!

பணத்திற்கு ஆசைப்பட்டு -
கவிமகள் எனை....
சினிமாப் பாட்டாய்
சிங்காரம் செய்து
ஆடவிட்டாயே -
துகில் உரித்து!

3 comments:

  1. நல்ல வரிகள் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. நன்றி உங்கள் கருத்துக்கு!

    ReplyDelete
  3. அருமை...நானும் உணர்ந்ததுண்டு..

    ReplyDelete