மாதங்களில் மகத்துவம்
சொரிய வந்த ரமழானே!
பூத்திருக்கிறது, முகங்களில்
மகிழ்ச்சிப் பூக்கள்;
காத்திருந்தோம்,
உனது வருகைக்காக!
இம்மை - மறுமை
ஈருலக வாழ்வுக்கும்
நேர்வழி காட்டும்
திருமறை ஈன்ற
அமுத சுரபியே!
நோன்பு எனும்
இன்பச் சிறையிருந்து
இறையருள் இரந்து
மாண்புடனே யாவரும்
மண்ணில் வாழ்ந்திடவே.....
மன இச்சைகளுக்கு
இறுக்கமாய் விலங்கிட்டு
பக்குவமாய் செயற்படவும்
பயிற்ச்சி யளிக்கும்
பணியாளனே,
புனித ரமழானே
கண்ணும் காதும் நாவும்
கடமையாய் எந்நாளும்
இறையாணை பேணவும்
துணையாய் நீ,
வருவாயே ரமழானே!
வல்ல இறையோனின்
திருப்தி ஒன்றையே
உள்ளம் கொண்டு
நோன்பிருந்தோரை....
உவப்போடு ஏற்று
வரவேற்கும் 'றையான்'
சொர்க்க வாயலின்
திறவுகோலாக வரும்
தீனின் மாதமே!
வெள்ளமாய் பெருகிவரும்
நன்மை யெல்லாம்
அள்ளிவரும் ரமழானே,
உளச் சுத்தியோடும்
பய பக்தியோடும்
எதிர்பார்த்து நின்றோம்;
இனிய ரமழானே!
***
நன்றி நண்பரே உங்கள் ஊக்குவிப்புக்கு
ReplyDeleteநன்றி !
ReplyDeleteஆகட்டும் ஆரிப்
Deleteநல்ல வரிகள் நண்பா...
ReplyDeleteரமலான் மாத வாழ்த்துக்கள் நண்பா... நன்றி....
மிக்க நன்றி தனபாலன் அண்ணா
Delete