பொத்துவில் பிரதேசத்தில் பெய்த அடர் மழை காரணமாக நாலாபுறமும் வெள்ளம் குடிகொண்டுள்ளது.
குறிப்பாக பொத்துவில் - செங்காமம் வீதியின் முதலாம் கட்டை அடியில் தாம்போதி உடைந்ததன் காரணமாக பொத்துவில் மொனராகலை கொழும்பு போக்குவரத்து முற்றுமுழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொத்துவில் - பாணமை வீதியின் நாவலாறு பகுதியில் பிரதான வீதியை குறுக்கருத்து செல்லும் வெள்ளத்தினால் பாணமைக்கான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
இதுதவிர பொத்துவில் - இன்ஸ்பெக்டர் ஏற்றம் பகுதியில் வெள்ளம், பிரதான வீதியை குறுக்கருத்து செல்வதால் அக்கரைப்பற்றுக்கான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொத்துவிலுக்கு விடுமுறைகால சுற்றுலா வந்தவர்களும் வேறிடம் செல்ல முடியாமல் பொத்துவிலிலே தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து கொண்டதால் பாதிப்புற்ற மக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி பாடசாலையில் தங்கியிருப்பதையும் காண முடிகிறது.
No comments:
Post a Comment