சுமார் 100 வருடங்கள் நின்றிருந்த முதிர்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து வீதியோரம் கிடந்து முதிர்ச்சியின் தளர்ச்சியை சொல்லி அழுகிறது.
மூன்று நாளாய் பெய்த தொடர் மழையின் சீற்றம் அந்தப் புளிய மரத்தின் ஆயுளை முடித்து வைத்தது.
'எவெடம் எவெடம் ' என்று கேட்டால்......
'புளியடி புளியடி' என்று சொல்வார்கள்.
அந்தப் 'புளியடி' இன்று வெட்டை வெளியாகத் தெரிகிறது. மனதில் கவலைதான் வருகிறது.
பொத்துவில் 'பிறைன்துரைக் கண்டத்தின்' பெருவீதியின் தொடக்கத்தில், நின்று நிழல் தந்து; தின்னப்பழமும் தந்து; அது நின்ற இடத்திற்கு புளியடி என்ற பெயரும் வைத்து; மறைந்த, புளிய மரத்தின் கடந்த கால நினைவுகள் இனிமையானதே!
No comments:
Post a Comment