Monday, December 29, 2014

சால்வையில் தொங்கிய ரவூப் ஹக்கீம் அன்னத்தில் சவாரி!


எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் 'மைத்திரிபால சிறிசேன' அவர்களை ஆதரித்து பொத்துவில் நகரில் இன்று (2014-12-28 ஞாயிற்றுக்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, கரு ஜயசூரிய, தயாகமகே மற்றும் இன்று அரசாங்கத்திலிருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவை வழங்கிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


வழமையை விட கூட்டத்திற்கு வந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

இதில் ரவூப் ஹக்கீம் அவர்கள் உரையாற்றும் போது......

"பொதுவேட்பாளருக்கு பேசுவது புரியவேண்டும் என்பதற்கான சிங்கள மொழியில் பேச நினைக்கிறேன். இன்று நாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எமது ஆதரவை வழங்க கட்சி சார்பாக முடிவெடுத்துள்ளோம். மேலும் இத்தேர்தலில் இக்கூட்டணிடன் இணைந்து செயற்பட்டு இக்கூட்டத்தை ஒழுங்கு செய்த S.S.P. மஜீத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

வேறு இடங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு செல்ல இருப்பதால் விரைவாக பேச்சை சுருக்கிக்கொண்டார் தலைவர் ரவூப் ஹக்கீம் .

கூட்டத்தில்  ரவூப் ஹக்கீம் அவர்கள் ஆற்றிய உரையை கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்கை
(Link) அழுத்துவதன் மூலம் காணலாம்.

https://www.youtube.com/watch?v=yUKFbADUJNs&feature=youtu.be
 
 

No comments:

Post a Comment