மலட்டு மலர்கள்!
இயற்கையின் சிரிப்பை;
மலர்களில் பார்த்தோம்!
மண்ணின் மதிப்பை
ஏன் மறந்தோம்?
சிந்தனையை
அடகு வைத்து
சிறு சாடிகளில்
போலிப் பூக்களின்
செயற்கைச் சிரிப்பை
ரசித்தோம்!
இயற்கையோ....
தடவிப் பார்த்தால்
பேதம் புரியவில்லை!
மேனியோ மென்மை
வாடாத தன்மை
வடிவும் உண்மை
வர்ணமும் பன்மை!
முத்த மிட்டால்....
வாச மில்லை;
மகரந்தப் பொடியும்
பூச வில்லை;
ஆலயம் செல்லும்
அந்தஸ்தும் - அந்தப்
பூவைக்கு இல்லை!
இல்ல மெல்லாம்
இடம் பிடித்தாலும்....
மானிட மனத்தை -
மயக்கி யாண்டாலும்....
மங்கையர் கூந்தலில்
தவ மிருந்தாலும்....
எப்போதுமே
சிரித்துக் கொண்டிருக்கும்
இந்தப் பூமகளை....
எந்தத் தேனீக்களும்
தேடி வருவதில்லையே!
****
கருத்துள்ள கவிதை !
ReplyDeleteநன்றி தனபாலன்!
ReplyDelete