Tuesday, May 8, 2012


விலை போகுமோ வாலிபம்?


கோழை யென்றாய்
கொள்கை யற்ற -
ஆண்மை யென்றாய்!

கல்யாணச் சந்தையிலே
விலை போகும் - நவயுக
காளை யென்றாய்;

ஏழை நான்....
என் செய்வேன்!

பெட்டியிலே.... பணம்
இருந்தால்தானே....

அட்டியலாய் - உன்
சங்குக் கழுத்தில் -
கட்டி விடலாம்....
பொற்றாலியை!

பத்துப் பவுணில்
பத்தரை மாற்றுத் தங்கத்தில்
பாவையுன் - காறை
எலும்பு மறைந்திடவே

போடவில்லை....
நகை யென்றால்....
பொறுத்திடுவாயோ - இந்த
பொல்லாத உலகத்திலே!

அடங்காத - உன்
ஆசைத் தீக்கு -
பல மடங்காய்
தீனி போடத்தானே....
கேட்கிறோம் - சீதனமே!

1 comment: