Wednesday, May 30, 2012


என்றும் பிள்ளையாக....?


பால்ய வயதில்
பால் மாவினைத் -
திருடித் தின்றேன்;

இன்று....
மனையாளின்
மனையிலும்....
அதே கதைதான்!

           *
அன்னை - அன்று
என்னை ஆண்டாள்;
என்னை இன்று....
இல்லத்தரசி ஆள்கிறாள்!

          *
அவதரித்த இல்லத்திலே
அன்று நான்....
அடிமட்ட உறுப்பினன்;

இல்லாளின் ஆட்சியிலே
இன்றும் நான்....
மாணவன்!


       














இலவசச் சீருடை
இல்லாக் காலத்தே.... என்
வெள்ளாடை விருப்பத்தை
வென்றேன் - அன்று....
கண்ணீர் யுத்தத்திலே!

வந்து சேர்ந்த
வாழ்க்கையின்
வறுமைப் பாதையிலே....
'பசுமைப் புரட்சி'
செய்கிறேன் - இன்று....
பருத்தியாடை கட்ட!

       *
பள்ளிப் பருவத்திலே
துள்ளித் திரிந்த - என்
துடுக்கடக்க.... அன்று
பள்ளியாசானின்
பிரம்பு வந்தது!

இன்று....
துள்ளியெழும்
என் ஆசைகளுக்கு
கொள்ளி வைக்க
பள்ளியறைப் பங்காளியின்
பகிடிவதை வந்தது!

         ***




No comments:

Post a Comment