Sunday, February 1, 2015

அரசியல் ஓட்டப்பந்தயத்தில் அமைச்சர்கள் இருவர்!

 
 
இன்று (2015-02-01) ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலுக்கு அமைச்சர்கள் இருவர் படையெடுத்து வந்து பொதுத்தேர்தலுக்கான முஷ்தீபுகளை தொடங்கி வைத்தனர்.
வழமைக்கு மாற்றமாகவே  இந்நிழ்வுகள் இடம்பெற்றதை காணமுடிந்தது. பொதுவாக தேர்தல் கால இறுதி நேரத்தில் வந்துவிட்டு வெற்றிபெற்று பதவிகளை ருசித்து அலுத்தபின் மீண்டும் தேர்தல் வரும்போது இறுதி நேரத்தில் வருவார்கள் என்பதுதான் வழமை என்பதை பொத்துவில் மக்கள் அறிவார்கள். ஆனால் இன்று நடந்த நிழ்வுகள் அவ்வாறில்லாத பல ஆச்சரியங்களை அரங்கேற்றியது.
 
யார் அந்த அமைச்சர்கள்?
 
அணி ஒன்று கட்சி இரண்டு!
இனம் ஒன்று கொம்பு இரண்டு!!
மரம் ஒன்று கிளை இரண்டு!!!
ரவூப் ஹக்கீம் ஒன்று ரிஷாட் பதியுதீன் ஒன்று!!!!
 
முன்னால் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் நிதியொதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்டு அவராலே திறந்துவைக்கப்பட்ட பொத்துவில் பிரதேச சபை புதிய கட்டிடத்தில் இன்னாள் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களது கூட்டம் பொத்துவில் பிரதேச சபைத்தலைவர் வாசீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 
அதே நேரத்தில் மர்க்கஸ் அருகில் உள்ள பஹ்ரியா வித்தியாலயத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  அங்குரார்ப்பண கூட்டம் அக்கட்சியின் பொத்துவில் மத்திய குழுவின் தலைவர் 'அப்துல்  ஹக்கீம்' அதிபர் அவர்களின் தலைமையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அலங்கரிப்புடனும் இடம் பெற்றது.
 
மக்களின் கிசுகிசுப்புகளோ இவ்வாரிருந்தது!
 
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முதன்முதலில் மைத்திரபாலவுக்கு ஆதரவளித்த முஸ்லிம் கட்சியான ரிஷாட் பதியுதீனின் கட்சி கிழக்கில் தம்மை விஞ்சிவிடுமோ என்ற பயத்தில் அடுத்த கணமே மைத்திரிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார் ரவூப் ஹக்கீம் அதன் தொடர்ச்சியே இன்று பொத்துவிலுக்கு ரிஸாட் பதியூதின் வருகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு தானும் வந்திருப்பாரோ!!
 
என்றாலும் இரு கூட்டத்திற்கும் வந்த பொதுமக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை போல் பொத்துவிலிலும் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பி அதற்கான தீர்வை வருகின்ற பொதுத்தேர்தலில் பெற விரும்புவதை காணமுடிகிறது!!!

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதை கீழே உள்ள லிங்கை அழுத்துவதன் மூலம் கேட்க முடியும்
 


அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கூட்டத்தின் போது
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கூட்டத்தின் போது


அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கூட்டத்தின் போது
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொத்துவில் மீன் சந்தையை பார்வையிட்டு மீனவர் பிரச்சனை பற்றி கேட்டறியும்போது
 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொத்துவில் மீன் சந்தையை பார்வையிட்டு மீனவர் பிரச்சனை பற்றி கேட்டறியும்போது

தலைவர் ரிஷாட் பதியுதீன் உடன் பொத்துவில் மத்திய குழு தலைவர் ஹக்கீம் அதிபர் மற்றும் செயலாளர் சலீம் சேர் அவர்களும்

பஹ்ரியா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது

பஹ்ரியா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது

மீனவர் பிரச்சனை பற்றி கேட்டறியும்போது
 
 
 

No comments:

Post a Comment