முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முகங்களெல்லாம் புதுமலர்வு. இப்போதுதான் இலங்கைக்கு சுதந்திரம் வந்ததோ என எண்ணுமளவுக்கு எங்கும் கொடி பறக்கிறது.
மைத்திரி வந்து சிங்கக்கொடிக்கு புது சுதந்திரம் தந்துவிட்டாரோ என்ற கேள்விக்கு விடையாக வீதியெல்லாம் கொடிகள் சுதந்திரமாய்ப் பறக்கின்றன. இல்லங்களிலும் வாகன ஊர்திகளிலும் சுதந்திர வண்ணக்கொடிகள் பறக்கின்றன. சுதந்திர உணர்வுகள் முஸ்லிம் மனங்களில் வாழ்த்துக்களாக பரிமாறப்படுகின்றன.
சென்ற காலங்களில் இந்தக் கொடிகள் முஸ்லிம் மனங்களில் விரும்பிப் பறக்கவில்லை. என்ன காரணம்!
அப்போது ஆட்சியில் இருந்தவரின் அகோரம்தான் முழுக்காரணம். அதனால்தான் அவரின்று மீட்சியே இல்லா பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கிறார்; அரசியல் அனாதையாக!!!
பத்திரிகை மலர்கள்
சிறப்பிதழ்கள் விரிக்க;
வானொலிக் குரல்கள்
வரலாறுகள் வாசிக்க;
தொலைக்காட்சிப் பெட்டிகள்
தொடராய் படம் பிடிக்க;
67வது அகவையை
அரசு குறைந்த செலவில்
கொண்டாடியது;
அதுவே,
மக்களுக்கு
அக மகிழ்வைத் தந்தது!
No comments:
Post a Comment