Sunday, February 8, 2015

பொத்துவில் மண்ணில் கால் பதித்த அரச தேவதை!

 
மைத்திரபால சிறிசேனவின் பெருவெற்றிக்கு பெரிதும் உதவிய பொத்துவில் முஸ்லிம் மக்களுக்கு நன்றி சொல்ல நங்கையவள் வந்தாள்; தங்கப்பதுமை போல!
 
பொங்கும் இளமைப் பருவத்தில் எங்கும் புகழ் மணக்க அரசியல் அலை எழுப்பி கலையரசியவள் இங்கும் கால் பதித்தாள்!
 
மாதர்குலம் மனம் மகிழ்ந்து குரவை ஒலியெழுப்பி வரவேற்க, ஆண்குலம் சீனவெடி கொழுத்தி மகிழ்ச்சியை தெரிவிக்க, அரங்கில் வந்து அமர்ந்தாள்; ஹிருணிக்கா எனும் இளவரசி!

பெண் மனம் பெண்ணுக்குத்தான் புரியும். அதனால்தானோ எங்கள் ஊர் பெண்களின் அரசியல் தேவையெல்லாம் ஆவலோடு கேட்டறிந்தார்!

ஏறெடுத்தும் பாராத எங்கள் முஸ்லிம் கட்சிகளின் தாறுமாறான அரசியலால் அவிந்து போன மாதர் குழுவின் மனங்களுக்கு மருந்தாக ஆறுதல் வார்த்தைகள் கூறினார்; ஆவன செய்வதாகவும் உறுதிமொழி அளித்தார்!

தேர்தல் காலத்தில் மட்டும் வந்து கத்தும் தவளைகள், இவர் அமர்ந்திருந்த மேடைப்பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை!
 
மக்கள் வாக்குகளை  விழுங்கிய  முதலைகளும் வருகை தரவில்லை. என்றாலும் பெருந்திரளாய் மக்கள் திரண்டு பூமாலைகள் சூட்டி சுந்தர தேவிக்கு வந்தனம் தெரிவித்தனர்; வரவேற்று, வாழ்த்தி மகிழ்ந்தனர்!!

இந்நிகழ்வில் ஹிருணிக்காவை வரவேற்றல் மற்றும் அவரது மேடைப்பேச்சை கீழ்வரும் லிங்கை அழுத்துவதன் மூலம் காணலாம்.


https://www.youtube.com/watch?v=CPDr3mvRJLY

திகதி: 2015-02-08 ஞாயிற்றுக்கிழமை



 
 



 

No comments:

Post a Comment