வாழ்க்கை புதிர்!
சவாலானால்....
சாதிக்கலாம்!
போராட்டமானால்
வென்று காட்டலாம்!
விளையாட்டானால்
களமிறங்கலாம்;
விடுகதையானால்....
விடுவிக்கலாம்!
வெகுமதியானால்....
வரவேற்கலாம்;
சுமையானால்....
தாங்கிக் கொள்ளலாம்!
சந்தர்ப்பமானால்....
பற்றிப் பிடிக்கலாம்;
சாக்கடையானால்.....
பூக்கடையாக்கலாம்!
வினாக் குறியானால்
விடை காணலாம்;
வியப்புக் குறியானால்......?
சிறைக் கூடமானால்
அடங்கிக் கிடக்கலாம்;
மரண வேதனையானால்......?
தென்றலானால்....
சுகங் காணலாம்;
சூறாவளியானால்......?
****
நியாயமான கேள்விகள் ..தொடருங்கள் .....வாழ்த்துக்கள் !
ReplyDeleteதம்பீ
ReplyDeleteவாழ்கையே ஒரு கேள்விக் குறிதான்
பலருக்கும். சிலருக்கு வேண்டுமானால ஆச்சிரியக்
குறியாக அமையலாம்
தொடரட்டும் உங்கள் கவிதைப்
பயணம் வாழ்க நலமுடன்
புலவர் சா இராமநுசம்
உண்மையாகவே புதிராகத் தான் உள்ளது....
ReplyDelete