Monday, September 15, 2014

பொத்துவிலில் புதிய பல்கலை மாணவர்களுக்கு பாராட்டு!


                          
                          பொத்துவிலில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் கல்விக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாராட்டுவிழாவும் எதிர்கால பொத்துவில் கல்வி வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் நிகழ்வும் நேற்று(2014-09-14) திங்கட்கிழமை பொத்துவில் YAKEEN EDUCATIONAL SOCIETY இன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவிலின் மதிப்பிக்குரிய பெரியோர், கற்றோர் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

உயர்தரப் பிரிவின் விஞ்ஞானப் பாடத்தில் கல்வி பயில்வதற்கு மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுகக்கு  ஊக்கமளிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்படும் இந்த நிறுவகம் ஆங்கில பாடத்தில் திறமை குன்றிய மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளையும் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






 




   

No comments:

Post a Comment