நெஞ்சுக்குள்ளே நெருப்பாறு!
ஒவ்வொரு நாளும்
பூமி உருண்டையை
எட்டிப்ப் பார்க்கும்
காலைக் கதிரவனை
கட்டியிழுக்க,
மாலையின் ஓரம்வரை
மல்லுக்கட்டுகிறேன்!
முயற்சியின் முடிவில்
சோர்ந்து போய்
நிசப்பத இரவின் நீளத்தை
நித்திரையில் தாண்டுகிறேன்!
காலத்தின் கட்டாயம் -
என் கண்களுக்கு இட்ட
வண்ணத்திரையை
கைகளால் விலக்க
எண்ணங் கொண்டு எடுத்த
போராட்டங்கள்
தோற்றுத்தான் போயின!
தொலைந்து போன
என் வாலிபத்தின்
கலைந்து போன கனவுகள்
முதுமையடைந்து - என்னை
முற்றுகையிட்டு நிற்க;
போலி உலகின் தளத்திற்கு
ஆடத் தெரியாமல்
ஆடிய குற்றம்
ஆணிவேரையும் தாண்டி
தண்டித்து நிற்கிறது!
மனிதம் மாய்ந்து;
'பணம்' மட்டுமே
பலவேடங்கள் பூண்டு
உயிரோடு வாழும்
மண்ணிலின்று....
பாதகனும் என்னை
பார்த்து சிரிக்க;
நேசங்கள் வேஷம் கலைத்து
நிஜங்களை உணர்த்த;
நாட்பட்ட நட்புகளும்
நாறிப் போக;
சிந்தைக்குள் புகுந்து
உலக விந்தைகள்
தெளிவைத் தெரிவிக்க;
தனிமரமாய் நின்று
விறகாகும் நாளை
விரைந்து அழைக்கிறேன்!
*****
அழகு சகோ
ReplyDelete