அந்நியன்!
உத்தரவுகளுக்கு
தாளம் போடத் தெரியா
தன்னலமற்ற ஊழியன் -
வாழத் தெரியா அந்நியன்!
சுரண்டி உயர்ந்தவன்
கண்களிலே....
உண்மையாய் உழைத்து
உண்பவன் அந்நியன்!
பொய் வாக்குறுதிகளால்
தேர்தல் வலை விரித்து;
தெருவெல்லாம் சோடித்து
இனத்துவேச உணர்வினை,
இதயமெல்லாம் விதைத்து
மக்களை வசீயமாக்கும்
அரசியல்வாதிகளின்
அகப் பார்வையிலே....
புள்ளடி போடும்
பொது மகன் அந்நியனே!
நாடாளும் கதிரைகளிலே
கும்மாளம் போடும்
கூட்டத்தாருக்கு....
எதிரணிக்காரன்
எந்நாளும் அந்நியனே!
ஆளும் வர்க்கமாம்
பெரும்பான்மைக் காரரிடம்
வாழும் காலமெல்லாம்
சுய உரிமைப் -
பிச்சை கோரும்
சிறுபான்மைக்காரரும்....
அந்நியனே!
கடைசியில்.....
சுனாமி
நிவாணங்களால்
கருணைக் கரம் நீட்டி
கவனித்துக் கொண்டவனும்
அந்நியனே!
***
அருமையான கருத்துக்கள் நண்பரே .உங்கள் வலை பூவில் இன்ட்லி ,தமிழ் மணம் ஓட்டு பட்டைகளை இணையுங்கள் .உதவிக்கு கீழ் கண்ட இணைப்பை பின் பற்றுங்கள் .http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
ReplyDeleteபரவால்லியே .......
ReplyDelete