சம உரிமை!
அன்புத் தாயென்றும்
அவளே -
முன்னறி தெய்வமென்றும்
பின் - தாரமென்றும்
பெண் குலத்தை,
அகிலமே
போற்றும் போது.....
தாய்க் குலமின்று
தாழ்வு மனம் கொண்டு
'அடிமைகள்' என்று
தம்மைத் தாமே
தாழ்த்திக் கொள்ளல்
தரணியில் முறையாமோ?
வீட்டுக்கு மட்டுமே
தலைவியாய்
வீற்றிருந்த பெண்ணெ - இன்று
நாட்டுக்கும் தலைவியாய் -
ஆன பின்னே
சமவுரிமை
கேட்பதென்ன பெண்ணே!
ஆணுக்குப் பெண் -
அடிமை யென்று -
யார் மொழிந்தார்,
கணவனின்
அன்புக்கும் ஆசைக்கும்
அடிமையாவதே
பெண்ணுக்கு
பெருமை தருமே!
பெண்ணுக்கு உரிமை
மறுத்தவர் யார்....?
ஆணுக்கு உரிமை
கொடுத்தவர் யார்....?
பெண்ணுக்கு ஆண் -
பொன்னால் தாலி கட்டுகிறான்
அவளுக்கு,
அவனே வேலியு மாகிறான்
ஆணுக்குப் பெண்
தாலி கட்டலாமா...?
அவன்தான்
கழுத்தை நீட்டுவானா......?
சமரசம் இருந்தால்.....
சமவுரிமை -
தானே தோன்றுமே!
****
No comments:
Post a Comment