நெருப்புக்குள்ளே....
'பகைகளில் பெரியது
புகை' என்றாரே!
உயிரை வெளியே
ஊதித் தள்ளுகிறாயே!
உடல் உருப்படவா
உன் பணத்தை எரிக்கிறாய்;
உன் ஊனத்தை யல்லவா
தீக்கிரை யாக்கிறாய்!
புகைப்பதால்
சுகிப்பது இன்ப மன்று;
சௌக்கியம் சொன்னது
பெரும் துன்ப மென்று !
விருப்போடு
பிடிப்பவரின் கையிலே
பிற்காலப் பிழைப்புக்காய்
சிரட்டைதனை
பரிசளிக்கும் 'சிகரெட்'டே!
உயிரணுக்களிலே
ஊடுருவியே
உயிரை மெல்ல மெல்ல
உறிஞ்சுகிறாயே!
இள வயதிலேயே
எமலோகம்
அழைத்துச் செல்ல வந்த
வெள்ளைக்கார தூதுவனோ நீ!
செவ்விதழ் செல்விகளை
தேடும் வாலிபரே,
உங்கள்
'தார் ரோடு' உதடுகளை -
ஒரு தரம்,
கண்ணாடி முன் நின்று
பாருங்களேன்!
****
அருமையான வரிகளுக்கேற்ற அருமையான படம்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio
புகை பகையென அறிந்தும்-தினம்
ReplyDeleteபுகைப்பவர் கண்டு வருந்தும்
முகமது உம்கவி கண்டேன்-நெஞ்சில்
உவகை மிகமிக கெண்டேன்
ஜெகமதில் புகழுடன் வாழ-இங்கே
செப்பினேன் வாழ்த்தும் சூழ
அகமதில் அமைதி நிலவ-உம்
ஆக்கம் உலகில் உலவ
புலவர் சா இராமாநுசம்